கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' |
முன்னணி மலையாள நடிகரான சுரேஷ் கோபி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றி வருகிறார். நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேஷ் கோபி, கேரளாவின் முதல் பாரதிய ஜனதா எம்.பி.ஆனார். இது பாரதிய ஜனதா கட்சி கேரளாவிற்குள் பலம் பெறுவதற்கு வழியாக அமைந்தது. இதற்கான பரிசாக பாரதிய ஜனதா அரசு அவரை மத்திய அமைச்சராக்கியது.
இந்நிலையில் கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி “அமைச்சர் பதவியை விட எனக்கு சினிமாதான் பெரிது. சினிமாவுக்காக அமைச்சர் பதவியை இழகத் தயார்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசும்போது “எனக்கு அமைச்சர் பதவியை விட சினிமாதான் முக்கியம். 22 படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியுள்ளேன். இந்தப் படங்களில் நடிக்க அனுமதி வேண்டும் என்று கூறி நான் அமித்ஷாவிடம் ஒரு கடிதம் கொடுத்தேன். அவர் அந்தக் கடிதத்தை கோபத்தில் தூக்கி வீசி விட்டார்.
சினிமாவில் நடிக்க அனுமதி கிடைக்காவிட்டாலும் எனக்கு கவலை இல்லை. செப்டம்பர் 6ம் தேதி 'ஒற்றக்கொம்பன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சினிமாவில் நடிக்கும் காரணத்திற்காக அமைச்சர் பதவியை விட்டு என்னை நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை. சினிமா இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன்”என்று பேசி உள்ளார். சுரேஷ் கோபியின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.