பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, ஒருவரை நான் தான் வளர்த்து விட்டேன் என்னால்தான் அவர் வளர்ந்தார் என யாரும் ஒருவர் வளர்ச்சியின் மீது முத்திரை குத்த முடியாது என்று சூரிக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது பற்றி பேசினார். ஆனாலும் அவர் பேசியது நடிகர் தனுஷ் குறித்து தான் என்று சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை கிளம்பியது.
காரணம் தனுஷ் தான், சிவகார்த்திகேயனை தனது 3 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு எதிர்நீச்சல், காக்கிச்சட்டை என தான் தயாரித்த படங்களின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கமர்சியல் அந்தஸ்து கிடைப்பதற்கு காரணமாகவும் அமைந்தார். பல இடங்களில் சிவகார்த்திகேயனும் தனுஷ் பற்றி உயர்வாக பேசி வந்த நிலையில் அவர் இப்படி பேசியது தான் சர்ச்சையை கிளப்பியது. தான் ரொம்பவே வளர்ந்து விட்டதால் தனது வளர்ச்சிக்கு திறமை தான் காரணம் என்றும் மற்றவர்கள் அல்ல என்பது போன்றும் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார் என்று பலரும் விமர்சித்து வந்தார்கள்.
இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்று தனுஷ் சிவகார்த்திகேயன் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டதுடன் இருவரும் அருகருகே நின்று அந்த நிகழ்ச்சியை கவனிக்கும் புகைப்படம் ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருந்த சர்ச்சைக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.