தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கு சினிமாவில் ஆக்சன் கிங்காகவும், வசூல் சக்ரவர்த்தியாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் நந்தபுரி பாலகிருஷ்ணா. இவர் 1974ம் ஆண்டு தனது தந்தை என்.டி .ராமராவ் நடித்த டாட்டம்மா காலா என்ற படத்தில் அறிமுகமானார். அதை அடுத்து இப்போது வரை சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா. இந்த நிலையில் அவர் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தியில், ஆக்சன் கிங், கலெக்ஷன் கிங், டயலாக் டெலிவரி கிங் என்னுடைய அருமை சகோதரர் பாலைய்யா சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து இன்னும் வலுவான இடத்தில் இருக்கிறார். இது மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருக்கு நல்ல மன அமைதி, நல்ல ஆரோக்கியம், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைப்பதற்கு கடவுளை வேண்டுகிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.