ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், பாடகியுமான ஆண்ட்ரியா திருவண்ணாமலையில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோயிலான அருள்மிகு அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஆண்ட்ரியா நெற்றியில் திருநீறும், குங்குமமும் இட்டு அண்ணாமலையார் கோயிலில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சினிமா விழாக்களிலும் மற்ற விழாக்களிலும் மாடர்ன் உடையில் கொஞ்சம் கிளாமராக வருபவர் ஆண்ட்ரியா. கிறிஸ்வது மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்து மதக் கோயிலுக்கு போகும் போது பாந்தமாகச் செல்ல வேண்டும் என சுடிதார் அணிந்து சென்று வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. ஒவ்வொருவது வெற்றிக்குப் பின்னும் தெய்வீகம் பின்னால் இருக்கிறது என்று ரசிகர் ஒருவர் கமெண்ட்டில் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நடிகையான சமந்தாவும் இந்து மதத்தில் பற்று கொண்டவர். வட இந்தியாவிலும் பல ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். அதேப்போல மலையாள நடிகையான கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த நயன்தாராவும் தமிழக மருமகளாகி பல கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் வழக்கம் கொண்டவர் என்பதும் அவர்களது ஆன்மீகப் பற்றை வெளிப்படுத்துவதாக உள்ளது.