ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. 600 கோடிக்கு மேல் அப்படம் வசூலித்த நிலையில், அதையடுத்து ஞானவேல் இயக்கி உள்ள வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. இந்த படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, இந்த படத்தை அடுத்து மீண்டும் நெல்சனுடன் இணைந்து ஜெயிலர்- 2 படத்தில் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து நெல்சன் கூறுகையில், ஜெயிலர் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அப்படத்தின் கதை திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதைவைத்து பார்க்கையில் தற்போது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து ஜெயிலர் 2 படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.