ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் ஒரு பாட்டுக்கு நடனமாடும் டான்சராக அறிமுகமான பிரபுதேவா, நடனம் மாஸ்டராகவும் பணியாற்றி வந்தவர், அதன் பிறகு ஹீரோவாகி பின்னர் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி என பல படங்களை இயக்கினார். பின்னர் தெலுங்கு, ஹிந்தியிலும் படங்கள் இயக்கினார். சமீபகாலமாக மீண்டும் நடிகர் மட்டுமின்றி நடனம் மாஸ்டராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது விஜய்யின் கோட் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் பிரபுதேவா அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னுடைய பிள்ளைகள் இடத்தில் நான் அதிகமான பாசம் வைத்திருக்கிறேன். ஆனால் அது போன்ற தவறை யாரும் செய்யாதீர்கள். காரணம் பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்தால் அதன் பிறகு அவர்களுக்கு ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டால் கூட அதை நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாது. குறிப்பாக அவர்களை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று எந்நேரமும் அவர்களைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டே இருப்போம். இதனால் நம்முடைய வாழ்க்கையை நம்மால் நிறைவாக வாழ முடியாது. அதனால் தான் பிள்ளைகள் மீது அதிகப்படியான பாசம் வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.