ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள நிலையில் செப்டம்பர் 23ம் தேதி விக்ரவாண்டியில் இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் கொடுத்ததை அடுத்து, 50 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மீடியாக்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் ஆண்கள் 30 ஆயிரம் பேர், பெண்கள் 15 ஆயிரம் பேர், முதியவர்கள் ஐந்தாயிரம் பேர், மாற்றுத்திறனாளிகள் 500 பேர் வீதம் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார். காவல்துறையின் இந்த கட்டுப்பாடு காரணமாக இந்த மாநாட்டில் சிறுவர், சிறுமிகளுக்கு அனுமதி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. என்றாலும் 50 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற காவல்துறையின் இந்த கட்டுப்பாட்டை விஜய் ஏற்றுக் கொள்வாரா? இல்லை ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு செல்வாரா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது.