ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பழம்பெரும் நடிகையான லதா(71). மறைந்த நடிகர் எம்ஜிஆர் உடன் பல படங்களில் நடித்துள்ளார். அவரின் ஆஸ்தான நடிகைகளில் இவரும் ஒருவர். 100 படங்களில் நடித்துள்ள இவர் தற்போதும் சினிமாவில் தனக்கு பிடித்த வேடங்களில் மட்டும் அவ்வப்போது நடிக்கிறார். சில சீரியல்களிலும் நடிக்கிறார். நடிகர் சங்கத்திலும் பொறுப்பில் உள்ளார்.
எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகிய பின்னர் மற்ற நடிகர்களான முத்துராமன், ரஜினி, கமல் உள்ளிட்டோருடனும் நடித்தார் லதா. பல ஹீரோக்களுடன் இவர் நடித்திருந்தாலும் நடிகர் ரஜினி உடன் மட்டும் இவரை வைத்து நிறைய கிசு கிசுகள் அப்போது வந்தன. இதுபற்றிய கேள்விக்கு இப்போது ஒரு பேட்டியில் நடிகை லதாவே பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : ‛‛ரஜினியை பொருத்தமட்டில் மிகவும் நல்லவர். எனக்கு நல்ல நண்பர் அவ்வளவு தான். அந்த சமயம் தான் அவர் வளர்ந்து வரும் நடிகர். நான் அப்பவே எம்ஜிஆர் படத்தின் ஹீரோயின். ஆழியாறு அணை அருகே ‛ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. நானும், மஞ்சுளாவும் நல்ல தோழிகள். மாலை நேரத்தில் எங்களுடன் வந்து ரஜினி அமர்ந்து கொள்வார். நல்லா பேசுவோம், சாப்பிடுவோம், கோயிலுக்கு எல்லாம் போவாம், அவ்வளவு தான். மற்றபடி எதுவும் கிடையாது.
இப்ப வர கிசு கிசு எல்லாம் ஒன்னுமில்லை. அப்போது எல்லாம் நிறைய கதை சொல்வார்கள். ஆனால் அது எதுமே உண்மையில்லை. ரஜினி ஒரு நல்ல மனிதர். இப்போது வரை நான் மதிக்கின்றன ஒரு நடிகர் என்பதை விட மனிதர். உலகளவில் அவர் புகழ்பெற்ற நடிகர் என்றாலும் கூட இன்றைக்கும் மிகவும் எளிமையான, அடக்கமான மனிதராக உள்ளார். அதனாலேயே இப்போது வரை அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என்றார்.