ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் 50வது ஆண்டைத் தொட உள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் வியாபார வட்டத்தை பெரிதாக்கியவர். அவர் கதாநாயகனாக உயர்ந்த பின் அந்தந்த கால கட்டங்களில் பிரபலமாகும் கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிவதை வழக்கமாக வைத்திருப்பார்.
இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரையில் எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏஆர் ரகுமான் என பயணித்தவர் அடுத்து இன்றைய தலைமுறை இசையமைப்பாளரான அனிருத்துடனும் சில படங்களைக் கடந்துவிட்டார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வந்த 'பேட்ட' படம்தான் ரஜினிகாந்த், அனிருத் கூட்டணியின் முதல் படம். அதற்கடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கிய 'தர்பார்', நெல்சன் இயக்கிய 'ஜெயிலர்' ஆகிய படங்களில் அக்கூட்டணி பயணித்தது. அடுத்து 4வது முறையாக தசெ ஞானவேல் இயக்கியுள்ள 'வேட்டையன்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்தது. நாளை இப்படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. நாளை வெளியாக உள்ள மற்ற பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அனிருத் இசையமைப்பில் கடைசியாக வெளிவந்த 'இந்தியன் 2' படம் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் அனிருத்திற்கும் பெயர் சொல்லும் படமாக அமையவில்லை. அப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. அந்தக் குறையை 'வேட்டையன்' படம் போக்கும் என அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.