ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சாண்டோ சின்னப்பா தேவர் அப்போது பெரிய தயாரிப்பாளர், அவரது சகோதரர் எம்.ஏ.திருமுகம் பெரிய இயக்குனர். இவர்கள் இருவருமே எம்ஜிஆரை வைத்துதான் படம் எடுப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் இவர்களை அழைத்து எம்ஜிஆர் படம் எடுக்கச் சொல்வார். மறுபேச்சு இல்லாமல் இவர்கள் எடுப்பார்கள். எம்ஜிஆரை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய திருமுகம், நடிகர் சிவாஜி வைத்து இயக்கிய ஒரே படம் என்றால் அது ‛தர்மராஜா' தான்.
1980ல் வெளியான இந்த படத்தில் சிவாஜி ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், வில்லனாக கே.பாலாஜியும் மற்றும் மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, புஷ்பலதா உள்ளிட்ட பலர் நடித்தனர். கோழையாக இருப்பவன் திடீர் வீரனாகிற கதை தான். சிவாஜி அந்த ஊரில் உள்ள கோவிலை பராமரிப்பவர். பெரிய மனிதர் போர்வையில் அந்த ஊருக்கும் வரும் கே பாலாஜி கோவிலில் உள்ள சாமி சிலையை திருடிவிட்டு சிவாஜியின் தங்கையையும் கெடுத்து விட்டு சென்று விடுவார். அப்பாவியான சிவாஜி, பக்கா ஹீரோவாகி, வெளிநாடெல்லாம் சென்று எப்படி பாலாஜியை பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
வெளிநாடு எல்லாம் சென்று படமாக்கினார்கள். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் சிவாஜி, திருமுகம் இணைந்து படம் பண்ணவில்லை.