விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்ததும் மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது. என்றாலும் அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் தற்போது கூலி படத்திற்கு பிறகு மலையாள இயக்குனர் ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கும் ஒரு படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்நிறுவனத்துக்கும் சிம்புவுக்குமிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக தற்போது அந்த கதையை ரஜினிக்காக திருத்தம் செய்து படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். கதையை கேட்ட ரஜினியும் நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக கூறுகிறார்கள்.
மேலும், இந்த ஜூட் அந்தோணி ஜோசப் மலையாளத்தில் பிரேமம், போக்கிரி சைமன், டான்ஸ் பார்ட்டி, குயின் எலிசபெத் என பல படங்கள் நடித்திருப்பதோடு, டொவினோ தாமஸ் நடித்து வெளியான ‛2018' என பல படங்களில் ரைட்டராக பணியாற்றி இருப்பதோடு குறும்படங்களும் இயக்கி உள்ளார்.