விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் மிக முக்கியமானவர் உடுமலை நாராணகவி. தனது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர். நேரடி அரசியலில் இல்லாவிட்டாலும், முன்னணி அரசியல் கட்சி தலைவர்களுக்கு நெருக்கமானவராக இருந்தார்.
இளம் வயதிலேயே தாய் தந்தையரை இழந்த நாராயணசாமி தனது அண்ணன் வீட்டில் வளர்ந்தார். தீப்பெட்டி சுமந்து விற்று ஒரு நாளைக்கு 25 காசு சம்பாதித்தார். வறுமையின் காரணமாக பள்ளிபடிப்பை 4வது வகுப்போடு முடிடித்துக் கொண்ட அவர் கிராமிய கலைகள் மீது ஆர்வம் கொண்டு அதனை கற்றார். உடுமலை சரபமுத்து சாமி கவிராயரிடம் நாடக நடிப்பும், பாடல் எழுதவும் கற்றார். பின்னர் சங்கரதாஸ் சாமியிடம் நாடக கலையை கற்று தேர்ந்தார். ஆரம்பத்தில் விடுதலை வேட்கையை தூண்டும் பாடல்களை எழுதியவர், பின்னர் திராவிட கருத்துகள், பகுத்தறிவு கருத்துள்ள பாடல்களை எழுதினார்.
'சந்திரமோகனா' என்ற படத்தில் முதல் பாடலை எழுதி திரையுலகில் அடியெடுத்து வைத்தார். திரைப்பாடல்கள், தனி பாடல்கள் எல்லாம் சேர்த்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார் நாராயண கவி. இன்று அவரின் 115வது பிறந்த நாள்