ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தொழில்நுட்ப வசதிகள் பெரிய அளவில் வளர்ச்சி காணாத 1960களின் ஆரம்பத்தில் புதுமை இயக்குநர் சிவி ஸ்ரீதர் தனது படக் குழுவினரோடு காஷ்மீர் சென்று, பெரும்பாலான காட்சிகளை அங்கு தங்கியிருந்து 52 நாட்களில் படமாக்கிய திரைப்படம் தான் “தேன்நிலவு”.
ஸ்ரீதரின் “சித்ராலயா” தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் மற்றும் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையோடு வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா, எம் என் நம்பியார், வசந்தி பிஏ, கேஏ தங்கவேலு, எம்.சரோஜா ஆகியோர் நடித்தனர். பிரபல பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான ஏஎம் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல்கள் அத்தனையும் தேன் போன்று இனிமையான ரகம்.
ஸ்ரீநகரில் இருந்து மிக தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கியிருந்துதான் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தது படக்குழு. காஷ்மீரில் எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் எடுத்து முடித்து, பின் சென்னை திரும்பி அவைகளை எல்லாம் பிரிண்ட் போட்டு பார்த்து, சரிவராத காட்சிகளை மீண்டும் காஷ்மீர் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது சாத்தியமற்ற ஒன்று.
இதனால் அதுவரை எடுத்த படச்சுருள்களின் நெகட்டிவ்வை சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணனிடம் தந்து, அவர் அதை எடுத்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை வந்து 'விஜயா லேபரட்டரி”யில் பிரிண்ட் போட்டு, மீண்டும் விமானம் மூலம் காஷ்மீர் சென்று கொடுத்துள்ளார். அங்கே படக்குழு தங்கியிருந்த கிராமத்தில் உள்ள ஒரு தியேட்டரில் அனுமதி பெற்று, அங்கு இரவுக் காட்சி முடிந்ததும் இரவு ஒரு மணிக்கு மேல் அந்த புரொஜக்டரில் இவர்கள் எடுத்த “தேன்நிலவு” படக்காட்சியை இயக்குநர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, ஜெமினிகணேசன், வைஜெயந்திமாலா, நம்பியார் ஆகியோர் திரையிட்டுப் பார்த்தனர்.
அதன்பின் அதிகாலை 3 மணிக்கு உறங்கச் சென்று, மீண்டும் காலை 6 மணிக்கு படப்பிடிப்பைத் தொடங்கி, திருப்தி தராத காட்சிகளை மறு படப்பிடிப்பு நடத்தி எடுத்து முடித்திருக்கின்றனர். இத்தனை சிரமங்களைக் கடந்து வந்துதான் இந்த “தேன்நிலவு” திரைப்படம் திரையில் தோன்றி நம்மை மகிழ்வித்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும் இத்தருணம், அன்றைய திரைக்கலைஞர்கள் தொழில் மீது காட்டிய அற்பணிப்பு எத்தகைய உன்னதமானது என்பது இதன் மூலம் நாம் அறியலாம்.