இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஆகியோருக்கு கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது. தங்களது மகன்களுக்கு உயிர், உலகம் என்று பெயர் வைத்த அவர்கள் தொடர்ந்து அவர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றுடன் தங்களது மகன்களுக்கு இரண்டு வயது நிறைவடைந்திருப்பதை அடுத்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டு உள்ளார் விக்னேஷ் சிவன். அந்த பதிவில், ‛‛உங்களுக்கு உயிர், உலகம் என்று பெயரிட்டதே நீங்கள் இருவரும் என்னுடைய உயிரும் உலகமுமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். உங்கள் மீது நான் மிகுந்த அன்பு செலுத்துகிறேன். உங்களது இரண்டாவது பிறந்தநாளில் இன்றைய தினம் அப்பா அம்மா மட்டுமின்றி மொத்த குடும்பமும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளது. கடவுளின் எல்லா அருளும் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து பேரோடும், என்னுடைய உயிர் உலகமுமாகிய உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என்று அவர் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.