தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் கடந்த 2000ம் ஆண்டில் காதல் ரோஜாவே என்ற படத்தில் அறிமுகமானவர்தான் பூஜா குமார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த பூஜாகுமார், அதையடுத்து உத்தம வில்லன், மீன்குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் நடித்தார். ஆங்கிலம் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
1999ம் ஆண்டு விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட பூஜா குமாருக்கு 2020ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தேசிய மகள் நாள் கொண்டாடப்பட்டதை அடுத்து தனது மகளுடன் தான் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் பூஜா குமார் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், மகளைப் பெற்றிருக்கும் அனைவருக்கும் தேசிய மகளிர் நாள் வாழ்த்துக்கள். இந்த அற்புதமான பெண்ணை பெற்ற நான் அதிர்ஷ்டசாலி . அவரை வளர்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உன்னை சந்திரனுக்கு அப்பாற்பட்ட அளவுக்கு நேசிக்கிறேன். வாழ்க்கை என்ற விளையாட்டில் நீ வெற்றி பெற உனது அனைத்து தேவைகளையும் நான் அளிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார் பூஜா குமார்.