ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பைக் ரேஸ் பிரியர்களுக்கு ரொம்பவே பரிச்சயமானவர் டிடிஎப் வாசன். அதிவேகமாக பைக் ஓட்டி சாகசங்கள் செய்து அதை யூடியூபில் பதிவேற்றம் செய்து நிறைய ரசிகர்களை இவர் சம்பாதித்துள்ளார். அதே சமயம் போக்குவரத்து விதி மீறல்கள் உள்ளிட்ட பல வழக்குகள் இவர் மீது பதியப்பட்டு அவ்வப்போது கைது செய்யப்படுவதும் வாடிக்கையாக மாறியது. இதன்மூலம் கிடைத்த புகழால் அறிமுக இயக்குனர் செல்அம் என்பவர் இயக்கும் மஞ்சள் வீரன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் டிடிஎப் வாசன். ஆனால் தற்போது சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து அவரை நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் செல்அம்.
இது குறித்து அவர் கூறும்போது, “டிடிஎப் வாசன் என்னுடன் பயணிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் சூழல் அதற்கேற்றதாக அமையவில்லை. அதனால் புதிய ஹீரோவுக்கான ஆடிசன் தற்போது போய்க்கொண்டிருக்கிறது. அக்டோபர் 15ம் தேதி அது குறித்த அறிவிப்பு வெளியாகும். அதே சமயம் படத்தில் இல்லாவிட்டாலும் டிடிஎப் வாசனுடன் எனது நட்பு தொடரும். டிடிஎப் வாசன் இல்லாமலேயே இந்த படத்தின் 35 சதவீத படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டோம்” என்று கூறியுள்ளார், இன்னொரு பக்கம் அக்டோபர் 6ம் தேதி துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 8ல் டிடிஎப் வாசனும் முக்கிய போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.