திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‛பிரதர்' படம் தீபாவளி வெளியீடாக அக்., 31ல் ரிலீஸாகிறது. ராஜேஷ் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதுதவிர ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவியின் 34வது பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் 'டாடா'. இவரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜெயம் ரவியின் 34வது படமாக உருவாகும் இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என இன்று போஸ்டருடன் அறிவித்துள்ளனர். தமிழக வரைபடம் வடிவிலாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் ஜெயம் ரவியின் ஒரு பாதி முகம் கருப்பு, வெள்ளையிலும், மற்றொரு பாதி கலரிலும் உள்ளது. மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.