ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை மாளவிகா மோகனன் மலையாளம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மாஸ்டர், மாறன், தங்கலான் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "பாலிவுட்டுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் கலாச்சார ரீதியான வேறுபாடு இருப்பதை காண்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும் ஒரு கலைஞராக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெவ்வேறு மொழி, உணவு மற்றும் பேசக்கூடாத விதிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நடிகர்கள் ஒரு நவீன நாடோடிகளை போன்றவர்கள்.
ஒரு நாள் ஐதராபாத் என்றால் அடுத்த நாள் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமம் என பயணிக்க வேண்டியிருக்கும். நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. ஒரு படம் ஹிட்டானால், நடிகர் தான் அதற்கான காரணம் என்பார்கள். ஒரு வேளை படம் ஓடவில்லை என்றால் நாயகியை குறை சொல்வார்கள். தென்னிந்திய சினிமாவில் இது சாதாரணமானது" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.