ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் விஜய் தனது 69வது படத்தை முடித்ததும் முழு நேர அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், அவரது இந்த அரசியல் வருகை குறித்து நவரச நாயகன் கார்த்திக் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதனால் தம்பி விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதை நான் வரவேற்கிறேன். சினிமாவில் தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது அவர் அரசியலுக்கு வருவது ரொம்ப பெரிய விஷயம்.
ஆனால் என்னை பொருத்தவரை அவர் அரசியல் கட்சி தொடங்கி செயல்பட்டாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம். காரணம் தான் சொல்ல விரும்பும் கருத்துக்களை சினிமா மூலம் வெளிப்படுத்தினால் அது எளிதில் மக்களை போய் சேரும். அதனால் விஜய் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே எனது கருத்து,'' என்று கூறியிருக்கிறார் நடிகர் கார்த்திக்.