ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமா தமிழகத்துக்குள் வந்ததும் முதலில் புராண கதைகள்தான் சினிமா ஆனது. பின்னர் சமூக கதைகள் வந்தது. இந்த வரிசையில் இப்போது கொண்டாடப்படும் பக்கா ஆக்ஷன் படமாக முதலில் வெளிவந்தது 'மெட்ராஸ் மெயில்' என்கிற படம். நாயகன், நாயகி, காதல், அதற்கு எதிராக ஒரு வில்லன். அந்த வில்லனை எதிர்த்து போராடும் ஹீரோ. காதலுக்கு டூயட் பாடல்கள், வில்லனோடு அனல் பறக்கும் சண்டை என்கிற இந்த பார்முலாவை தொடங்கி வைத்த படம் இது.
படத்தின் நாயகன் ரொம்ப நல்ல இளைஞர். எல்லோருக்கும் உதவி செய்யும் பரமோபகாரி. அவருக்கு ஜமீன்தார் மகளான நாயகிக்கும் முதலில் மோதல் உருவாகி பின்னர் அது காதலாகிறது. நாயகியின் அழகில் மயங்கும் மந்திரி ஒருவர் அவளை திருமணம் செய்ய நினைக்கிறார். இதற்கு இடையூறாக இருக்கும் ஹீரோ மீது பழிசுமத்தி சிறைக்கு அனுப்புகிறார். சிறையில் இருந்து தப்பும் ஹீரோ தனது பெயரை 'மெட்ராஸ் மெயில்' என்று மாற்றிக் கொண்டு அமைச்சரை பழிவாங்கி, நாயகியை மணந்து மக்களிடையே மெட்ராஸ் மெயில் என கொண்டாடப்படுகிற ஒருவராக மாறுகிறார். இதுதான் படத்தின் கதை. இதே கதையில் வரும் வாரம்கூட ஒரு படம் வரக் கூடும்.
1936ம் ஆண்டு வெளியான இந்த படத்தை சி.எம்.திரிவேதி இயக்கியிருந்தார் அப்போது தற்காப்பு கலைஞராக இருந்த பேட்டலிங் மணி என்பவர் நாயகனாக நடித்தார். அவரே கதையையும் எழுதியிருந்தார். நாயகியாக டி.என்.மீனாட்சி நடித்திருந்தார். படமும் நல்ல வரவேற்பை பெற்றது.