ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஒரு சில நடிகைகள் மட்டுமே பிரபல நாவல் கதைகளில் நடித்துள்ளனர். லட்சுமி, சாரதா, சரிதா இப்படி ஒரு சில நடிகைகளை குறிப்பிடலாம். ஜெயலலிதாவும் ஒரு சில நாவல்கதைகளில் நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது 'நதியை தேடி வந்த கடல்'. பிரபல எழுத்தாளர் மகரிஷி எழுதிய நாவல் அதே தலைப்பில் படமானது.
இதில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக சரத்பாபு நடித்திருந்தார். படாபட் ஜெயலட்சுமி. ஸ்ரீகாந்த், மாஸ்டர் சேகர், ஜமீலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். பஞ்சு அருணாசலம் வசனம் எழுதியிருந்தார். முன்னணி எடிட்டரான பி.லெனின் இயக்கி இருந்தார்.
இந்த படத்திற்கு முன்பு ஜெயலலிதா நடித்த 'மாற்றான் தோட்டத்து மல்லிகை', 'மணிப்பூர் மாமியார்' படங்கள் வெளியாகவில்லை. அதனால் இதுவே ஜெயலலிதாவுக்கு கடைசி படமானது. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 'தவிக்குது தவிக்குது ஒரு மனது..' என்ற பாடல் இப்போதும் தேன் சொட்டும் பாடலாக ரசிக்கப்படுகிறது. அதில் ஜெயலலிதா ஆடியிருக்கும் நடனமும் மனதை கொள்ளை கொள்ளும்.