இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஒரு சில நடிகைகள் மட்டுமே பிரபல நாவல் கதைகளில் நடித்துள்ளனர். லட்சுமி, சாரதா, சரிதா இப்படி ஒரு சில நடிகைகளை குறிப்பிடலாம். ஜெயலலிதாவும் ஒரு சில நாவல்கதைகளில் நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது 'நதியை தேடி வந்த கடல்'. பிரபல எழுத்தாளர் மகரிஷி எழுதிய நாவல் அதே தலைப்பில் படமானது.
இதில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக சரத்பாபு நடித்திருந்தார். படாபட் ஜெயலட்சுமி. ஸ்ரீகாந்த், மாஸ்டர் சேகர், ஜமீலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். பஞ்சு அருணாசலம் வசனம் எழுதியிருந்தார். முன்னணி எடிட்டரான பி.லெனின் இயக்கி இருந்தார்.
இந்த படத்திற்கு முன்பு ஜெயலலிதா நடித்த 'மாற்றான் தோட்டத்து மல்லிகை', 'மணிப்பூர் மாமியார்' படங்கள் வெளியாகவில்லை. அதனால் இதுவே ஜெயலலிதாவுக்கு கடைசி படமானது. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 'தவிக்குது தவிக்குது ஒரு மனது..' என்ற பாடல் இப்போதும் தேன் சொட்டும் பாடலாக ரசிக்கப்படுகிறது. அதில் ஜெயலலிதா ஆடியிருக்கும் நடனமும் மனதை கொள்ளை கொள்ளும்.