சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கடந்தாண்டு இறுதியில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'பார்க்கிங்'. இதன் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். பார்க்கிங் பிரச்னையை வைத்து இந்தப்பட கதை வெளியானது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இவர் இயக்குவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‛அமரன்' படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படங்களை எல்லாம் முடித்ததும் ராம்குமார் பாலகிருஷ்ணன் படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது.