பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழில் ‛பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான்' போன்ற படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார்- 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்து விட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சர்தார் 2 படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு தான் காலை 6 .34 மணிக்கே ஸ்பாட்டில் ஆஜராகி விட்டதாக புகைப்படத்துடன் ஒரு தகவலையும் இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார் மாளவிகா மோகனன். இப்படி அதிகாலையே படப்பிடிப்பு தளத்தில் தான் ஆஜரான செய்தியை அவர் வெளியிட்டதை பார்த்து, உங்களுக்கு அவ்ளோ தொழில் பக்தியான்னு சோசியல் மீடியாவில் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.