இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கோட் படத்தை அடுத்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசை அமைக்க, முதல்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது. அங்கு நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் விஜய் நடித்த ஓப்பனிங் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு முதல் கட்ட படப்பிடிப்புக்கு பத்து நாட்கள் திட்டமிட்டு இருந்த வினோத், 9 நாட்களிலேயே அனைத்து காட்சிகளையும் படமாக்கிவிட்டு திரும்பியிருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அதாவது காவல் துறையிலிருந்து ஒரு பிரச்னையால் வெளியேறும் விஜய், ஒரு முக்கிய கேஸ் சம்பந்தமாக மீண்டும் போலீஸ் பணியில் சேர்ந்து அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் வகையில் இதன் கதை அமைந்திருக்கிறது. அந்த குற்றவாளி யார்? எப்படிப்பட்ட குற்றம் செய்தவர் என்ற சஸ்பென்ஸ் உடையும்போது மிகப்பெரிய அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்குமாம். அதன் காரணமாகவே இந்த சஸ்பென்ஸ் உடைந்திராத வகையில் அது சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு உள்ளாராம் எச்.வினோத்.