ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை விக்ரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மாநாட்டுக்கு வரவிருக்கும் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் விஜய்.
அந்த வகையில், இன்று விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‛‛பெயரை போல சில விஷயங்களை திரும்பத் திரும்ப சொல்லியாக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்த போகிறேன். காரணம் எல்லா வகையிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்பும் முக்கியம். ஆகவே மாநாட்டு பயணம் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும். இரு சக்கர வாகன பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்பு கருதியே இதை சொல்லுகிறேன். அதேபோல வருகிற வழியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்யாமல் வரவேண்டும்.
போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு மாநாட்டு பணிக்கான கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்து வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை 27- 10 -2024 நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டுவோம் என்று அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்திருக்கிறார்.