ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வித்தியாசமான திரைக்கதை, மேக்கிங் என புதுமையாக செய்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இவரின் பெரும்பாலான படங்களில் ஒரு முக்கிய காட்சியை சிங்கிள் டேக்கில் படமாக்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.
குறிப்பாக ஜிகர் தண்டா, இறைவி, ஜகமே தந்திரம், மகான் போன்ற படங்களில் சிங்கிள் டேக்கில் ஒரு முக்கிய காட்சியை படமாக்கினார். தற்போது இந்த வரிசையில் கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சூர்யாவின் 44வது படத்தினை இயக்கியுள்ளார். இதில் 15 நிமிடக் காட்சியை ஒரே டேக்கில் படமாக்கியுள்ளனர். அந்தக் காட்சியில் வசன உச்சரிப்பு, பாடல், சண்டை என அனைத்துமே கலந்து இருக்கும் என்கிறார்கள். இந்தக் காட்சிக்காக முன் தயாரிப்பு செய்யப்பட்டு, ஒரே டேக்கில் செய்துள்ளனர்.