அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன், நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்ட கை, ஊருக்கு உழைப்பவன் இந்த நான்கு படங்களையும் இயக்கியவர் மலையாள இயக்குனர் எம் கிருஷ்ணன் நாயர். இவை அனைத்துமே வெற்றி படங்கள்.
இது தவிர தலைப்பிரசவம், முத்துச்சிப்பி, ஆளுக்கொரு வீடு, மன்னிப்பு, மகனே நீ வாழ்க, குடும்பம் உட்பட மொத்தம் 18 தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 120 படங்களை இயக்கியுள்ளார். 1955ம் ஆண்டு மலையாளத்தில் 'சி.ஐ.டி' படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'காவியமேளா' என்ற படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
பிரபல இயக்குநர்கள் ஹரிஹரன், எஸ்.பி.முத்துராமன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட பிரபல திரைப்பட இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றினார்கள். 2001ம் ஆண்டு 74வது வயதில் காலமானார்.