பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன், நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்ட கை, ஊருக்கு உழைப்பவன் இந்த நான்கு படங்களையும் இயக்கியவர் மலையாள இயக்குனர் எம் கிருஷ்ணன் நாயர். இவை அனைத்துமே வெற்றி படங்கள்.
இது தவிர தலைப்பிரசவம், முத்துச்சிப்பி, ஆளுக்கொரு வீடு, மன்னிப்பு, மகனே நீ வாழ்க, குடும்பம் உட்பட மொத்தம் 18 தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 120 படங்களை இயக்கியுள்ளார். 1955ம் ஆண்டு மலையாளத்தில் 'சி.ஐ.டி' படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'காவியமேளா' என்ற படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
பிரபல இயக்குநர்கள் ஹரிஹரன், எஸ்.பி.முத்துராமன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட பிரபல திரைப்பட இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றினார்கள். 2001ம் ஆண்டு 74வது வயதில் காலமானார்.