சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவர் திரிஷா. தனது படம் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், தனது சுற்றுப்பயணங்கள் குறித்து அடிக்கடி பதிவு வெளியிடும் திரிஷா அவ்வப்போது வளர்ப்பு பிராணிகள் குறித்தும் பதிவிடுவார். குறிப்பாக தெரு நாய்கள் பற்றி அதிகமாக பதிவிடுவார்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு புதிராக இருக்கிறது. பலரும் இதனை ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறார்கள்.அதில் அவர், "நான் மனிதர்களை தவிர்த்துவிடுகிறேன். நாய்களை நேசிக்கிறேன். எனது நாய் மற்ற நாய்களை தவிர்த்துவிடுகிறது. மனிதர்களை நேசிக்கிறது. நாம் இணைந்து நேசம் மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவின் மூலம் திரிஷா மறைமுகமாக ஒரு விஷயத்தை சொல்ல வருகிறார் என்று நெட்டிசன்களும், ரசிகர்களும் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
திரிஷா, தற்போது அஜித் ஜோடியாக 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' மற்றும் கமல்ஹாசனுடன் 'தக் லைப்' படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா', மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ராம்' ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.