இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் ஒரு ரிசார்ட்டில் நடந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர்.
அந்தத் திருமண நிகழ்வை ஓடிடி தளத்திற்கு சில பல கோடிகளுக்கு விற்றதாக அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இயக்குனர் கவுதம் மேனன்தான் அதை இயக்கினார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த நிகழ்ச்சி பற்றிய மேற்தகவல்கள் வெளியாகாமல் இருந்தன.
இந்த மாதத் துவக்கத்தில் 'நயன்தாரா . பியான்ட் த பேரி டேல்' என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சி ஓடிடியில் விரைவில் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது அந்த நிகழ்ச்சி நவம்பர் 18ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.