ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் நடித்து வெளிவந்த படத்தின் கிளைமாக்சில் தன்னிடமிருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் விஜய் கொடுக்கும்படியான காட்சி ஒன்று இருந்தது. சினிமாவை விட்டு விலகி விஜய் அரசியலில் பயணிக்கப் போவதை அடுத்து அவருடைய இடத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு சிவகார்த்திகேயனுக்குத்தான் இந்த இடம் என 'குறீயீடாக' அந்தக் காட்சி அமைந்ததா என பலரும் விமர்சித்தார்கள்.
'அமரன்' படத்தின் புரமோஷனுக்காக நேற்று கோவை சென்ற சிவகார்த்திகேயனிடம் அது குறித்து பத்திரிகை நிருபர்கள் கேட்டனர். அதற்கு சிவகார்த்திகேயன், “நான் அந்தக் காட்சிக்குள்ள எதுவுமே பார்க்கலை. சினிமாவுல நடந்த அழகான ஒரு நிகழ்வா பார்க்கிறேன். ஒரு சீனியர் ஆக்டர், அடுத்த அவங்க செட் ஆக்டரோட ஒரு ஸ்கிரீன் ஷேர் பண்ணாங்க. அது அழகா இருந்துச்சு, அதை மட்டும்தான் நான் பார்த்தேன். நான் சினிமாவுல சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு,” எனப் பேசி சமாளித்தார்.
விஜய் கடைசியாக அவரது 69வது படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருக்குப் பின் அந்த இடத்திற்கு யார் வரப் போகிறது என்ற போட்டி இப்போதே ஆரம்பமாகிவிட்டது.