இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள அவரது 69வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. தீவிர அரசியலுக்கு இறங்குவதற்கு முன்பாக விஜய்யின் கடைசி படமாக இப்படம் அமைய உள்ளது. அதனால், படத்தின் மீது நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது.
அரசியல் கதையாக, அரசியல் பன்ச் வசனங்கள் உள்ள படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, படத்திற்கான வியாபாரமும் இப்போதே மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை 'பார்ஸ் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 75 கோடி கொடுத்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார்களாம்.
இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படத்தின் வெளிநாட்டு உரிமையையும் அந்த நிறுவனம்தான் வாங்கியிருந்தது. அதன் விலை சுமார் 70 கோடி வரை இருந்ததாம். தற்போது கூடுதல் தொகையுடன்தான் 'விஜய் 69' உரிமையை வாங்கியுள்ளார்கள். விஜய்யின் கடைசி படம் என்பதால் அத்தொகையை எளிதில் வசூலித்து விடலாம் என்ற நம்பிக்கைதான் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
'விஜய் 69' படத்தின் இதர வெளியீட்டு உரிமைகள் அனைத்துமே அவரது முந்தைய படங்களை விடவும் அதிகமாகவே நடக்கும் என வியாபார வட்டாரங்களில் சொல்கிறார்கள். அதே சமயம், படத்தின் பட்ஜெட்டை அதிகப்படுத்தி விடக் கூடாது என்பதில் தயாரிப்பு நிறுவனமும் மிகவும் உறுதியாக இருககிறது என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது.