ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள அவரது 69வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. தீவிர அரசியலுக்கு இறங்குவதற்கு முன்பாக விஜய்யின் கடைசி படமாக இப்படம் அமைய உள்ளது. அதனால், படத்தின் மீது நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது.
அரசியல் கதையாக, அரசியல் பன்ச் வசனங்கள் உள்ள படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, படத்திற்கான வியாபாரமும் இப்போதே மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை 'பார்ஸ் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 75 கோடி கொடுத்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார்களாம்.
இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படத்தின் வெளிநாட்டு உரிமையையும் அந்த நிறுவனம்தான் வாங்கியிருந்தது. அதன் விலை சுமார் 70 கோடி வரை இருந்ததாம். தற்போது கூடுதல் தொகையுடன்தான் 'விஜய் 69' உரிமையை வாங்கியுள்ளார்கள். விஜய்யின் கடைசி படம் என்பதால் அத்தொகையை எளிதில் வசூலித்து விடலாம் என்ற நம்பிக்கைதான் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
'விஜய் 69' படத்தின் இதர வெளியீட்டு உரிமைகள் அனைத்துமே அவரது முந்தைய படங்களை விடவும் அதிகமாகவே நடக்கும் என வியாபார வட்டாரங்களில் சொல்கிறார்கள். அதே சமயம், படத்தின் பட்ஜெட்டை அதிகப்படுத்தி விடக் கூடாது என்பதில் தயாரிப்பு நிறுவனமும் மிகவும் உறுதியாக இருககிறது என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது.