ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகை தாண்டி தமிழில் அறிமுகமாகி பின்னர் அப்படியே படிப்படியாக தெலுங்கு, ஹிந்தி திரையுலகம் வரை சென்று விட்டார். குறிப்பாக தமிழை விட தெலுங்கு திரையுலக படைப்பாளிகளும் ரசிகர்களும் துல்கர் சல்மானுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து அவரை ஆராதித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அவர் நடித்த 'சீதாராமம்' படம் அவரை தெலுங்கு ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக்கியது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ஷனில் துல்கர் சல்மான் நடித்த 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. நான்கே நாட்களில் 55 கோடி வசூலித்து தற்போது அடுத்த இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. துல்கர் சல்மானை தெலுங்கில் முதன் முதலாக 'மகாநடி' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரும் சமீபத்தில் வெளியான 'கல்கி' படத்தின் இயக்குனருமான நாக் அஸ்வினும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “நான் சென்னையில் இருந்த துல்கர் சல்மானிடம் 'மகாநடி' படத்தின் கதையை சொல்வதற்காக சென்றேன். ஆனால் அவர் கதையை கேட்கும் முன்பாகவே இந்த படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டார். காரணம் எனக்கு தெலுங்கு பேச வராது.. அதனால் தெலுங்கு படங்களில் நடிக்க முடியாது.. படம் பார்க்கும் ரசிகர்கள் என்னை கூர்மையாக கவனிப்பார்கள். இவனுக்கு தெலுங்கு பேசவே தெரியவில்லையே என்று சொல்லி விட மாட்டார்களா, என்று கூறினார்.
ஆனால் அவரை கன்வின்ஸ் செய்து அந்த படத்தில் நடிக்க வைத்தேன். இன்று ஆறு வருடங்களுக்குப் பிறகு, மூன்று பிளாக் பஸ்டர்கள் சேர்ந்த ஒரு ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு இதோ தெலுங்கு ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக ஒரு தெலுங்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு அவர் உயர்ந்துள்ளார். இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு நன்றி” என்று துல்கர் சல்மானை மேடையில் வைத்துக் கொண்டே இந்த புதிய தகவலை வெளியிட்டார் இயக்குனர் நாக் அஸ்வின்.