இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினி நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ரஜினி, கமலுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அவர் கூறுகையில், ரஜினியை பொறுத்தவரைக்கும் எப்போதுமே அவர் இயக்குனர்களின் நடிகர். நாம் என்ன சொல்கிறோமோ அதை உள்வாங்கி அப்படியே நடித்துக் கொடுப்பார். அதோடு, உடன் நடிக்கும் சக நடிகர்களின் நடிப்பையும் கவனித்து அதற்கு ஏற்ற நடிப்பை தானும் வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் கமலை எடுத்துக் கொண்டால், ஒரு நடிகர் மட்டுமின்றி, இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர் என பலர் அவருக்குள் இருக்கிறார்கள். அதனால் பல விஷயங்கள் அவர் உன்னிப்பாக கவனித்து செயல்படுவார். கேமராவுக்கு முன்பு வரும்போது மட்டுமே அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவார் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.