ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'அமரன்'. இப்படத்தின் முதல் நாள் வசூலை மட்டும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தற்போது படம் வெளிவந்து ஒரு வாரமாகியும் அதற்கடுத்த வசூல் விவரங்களை வெளியிடவில்லை.
இருப்பினும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இப்படம் குறித்த வசூல் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆந்திராவில் 22 கோடி, கர்நாடகாவில் 11 கோடி, கேரளாவில் 6 கோடி, இதர மாநிலங்களில் 2 கோடி, வெளிநாடுகளில் 52 கோடி என இப்படத்தின் மொத்த வசூல் 193 கோடி வரையிலும் இருக்கலாம் என்கிறார்கள். இந்த வார முடிவில் 200 கோடி வசூலைக் கடந்துவிடும் என்பதும் லேட்டஸ்ட் அப்டேட்.
தமிழகத்தில் மட்டும் 100 கோடி, மொத்தமாக 200 கோடி வசூல் என்பது சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு செல்லும் ஒன்றாகும். இந்த உச்சத்தை சிவகார்த்திகேயன் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தால் நல்லது என கோலிவுட்டினர் தெரிவிக்கிறார்கள்.