தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக பேசியதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதையடுத்து அவர் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டு கொண்டார். என்றாலும் கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரியின் இல்லத்துக்கு போலீசார் சென்றார்கள். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அதையடுத்து தாங்கள் கொண்டு சென்ற சம்மனை அவர் வீட்டு சுவரில் ஒட்டிவிட்டு காவல் துறையினர் திரும்பினார்.
இந்த நிலையில் இன்று நடிகை கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசியதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன். ஆனபோதும் அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற உள்ளது.