நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக பேசியதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதையடுத்து அவர் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டு கொண்டார். என்றாலும் கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரியின் இல்லத்துக்கு போலீசார் சென்றார்கள். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அதையடுத்து தாங்கள் கொண்டு சென்ற சம்மனை அவர் வீட்டு சுவரில் ஒட்டிவிட்டு காவல் துறையினர் திரும்பினார்.
இந்த நிலையில் இன்று நடிகை கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசியதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன். ஆனபோதும் அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற உள்ளது.