இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடித்துள்ள 'கங்குவா' படம் நாளை மறுதினம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் 2000 கோடியை நிச்சயம் வசூலிக்கும் என படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏற்கெனவே அறிவித்திருந்தார். அவ்வளவு கோடி வசூலிக்க வேண்டும் என்றால் அதற்குரிய தியேட்டர்களில் படம் வெளியாக வேண்டும்.
படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் கூட தியேட்டர்கள் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடியவில்லை. அதனால், ஆன்லைன் முன்பதிவும் முழு வீச்சில் ஆரம்பமாகவில்லை. சென்னையைப் பெறுத்தவரையில் 8 தியேட்டர்களில் மட்டுமே முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.
படத்திற்கான தியேட்டர்கள் ஒப்பந்தத்தில் வினியோகஸ்தர் தரப்பில் கேட்கப்படும் சதவீதத் தொகையைத் தர தியேட்டர்காரர்கள் சம்மதிக்கவில்லை என்று தகவல். அதனால், ஒப்பந்தம் போடுவதில் இழுபறி நீடித்து வருகிறதாம். ஏற்கெனவே சொன்னபடி பல தியேட்டர்களில் 'அமரன்' படத்தைத் தொடரவே விரும்புகிறார்களாம். முக்கியமான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையாம்.
கடந்த வாரத்திலேயே முடித்திருக்க வேண்டிய ஒப்பந்த வேலைகளை இன்னமும் இழுத்துக் கொண்டிருக்கிறார்களே என திரையுலகிலேயே சிலர் ஆச்சரியப்படுவதாகத் தகவல்.