தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடித்துள்ள 'கங்குவா' படம் நாளை மறுதினம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் 2000 கோடியை நிச்சயம் வசூலிக்கும் என படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏற்கெனவே அறிவித்திருந்தார். அவ்வளவு கோடி வசூலிக்க வேண்டும் என்றால் அதற்குரிய தியேட்டர்களில் படம் வெளியாக வேண்டும்.
படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் கூட தியேட்டர்கள் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடியவில்லை. அதனால், ஆன்லைன் முன்பதிவும் முழு வீச்சில் ஆரம்பமாகவில்லை. சென்னையைப் பெறுத்தவரையில் 8 தியேட்டர்களில் மட்டுமே முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.
படத்திற்கான தியேட்டர்கள் ஒப்பந்தத்தில் வினியோகஸ்தர் தரப்பில் கேட்கப்படும் சதவீதத் தொகையைத் தர தியேட்டர்காரர்கள் சம்மதிக்கவில்லை என்று தகவல். அதனால், ஒப்பந்தம் போடுவதில் இழுபறி நீடித்து வருகிறதாம். ஏற்கெனவே சொன்னபடி பல தியேட்டர்களில் 'அமரன்' படத்தைத் தொடரவே விரும்புகிறார்களாம். முக்கியமான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையாம்.
கடந்த வாரத்திலேயே முடித்திருக்க வேண்டிய ஒப்பந்த வேலைகளை இன்னமும் இழுத்துக் கொண்டிருக்கிறார்களே என திரையுலகிலேயே சிலர் ஆச்சரியப்படுவதாகத் தகவல்.