பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடித்துள்ள 'கங்குவா' படம் நாளை மறுதினம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் 2000 கோடியை நிச்சயம் வசூலிக்கும் என படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏற்கெனவே அறிவித்திருந்தார். அவ்வளவு கோடி வசூலிக்க வேண்டும் என்றால் அதற்குரிய தியேட்டர்களில் படம் வெளியாக வேண்டும்.
படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் கூட தியேட்டர்கள் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடியவில்லை. அதனால், ஆன்லைன் முன்பதிவும் முழு வீச்சில் ஆரம்பமாகவில்லை. சென்னையைப் பெறுத்தவரையில் 8 தியேட்டர்களில் மட்டுமே முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.
படத்திற்கான தியேட்டர்கள் ஒப்பந்தத்தில் வினியோகஸ்தர் தரப்பில் கேட்கப்படும் சதவீதத் தொகையைத் தர தியேட்டர்காரர்கள் சம்மதிக்கவில்லை என்று தகவல். அதனால், ஒப்பந்தம் போடுவதில் இழுபறி நீடித்து வருகிறதாம். ஏற்கெனவே சொன்னபடி பல தியேட்டர்களில் 'அமரன்' படத்தைத் தொடரவே விரும்புகிறார்களாம். முக்கியமான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையாம்.
கடந்த வாரத்திலேயே முடித்திருக்க வேண்டிய ஒப்பந்த வேலைகளை இன்னமும் இழுத்துக் கொண்டிருக்கிறார்களே என திரையுலகிலேயே சிலர் ஆச்சரியப்படுவதாகத் தகவல்.