இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மனைவி மகேஸ்வரி. 66 வயதான இவர் கடந்த 4 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்து வருகிறார். அவரை கவனித்துக் கொள்வதற்கென்றே தனி பணியாளர்களை சத்யராஜ் நியமித்துள்ளார். இது திரைத்துறையில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தெரியும். என்றாலும் இதனை சத்யராஜ் குடும்பம் வெளிப்படையாக அறிவிக்காததால் யாரும் இதுபற்றி வெளியில் பேசவில்லை.
இந்த நிலையில் சத்யராஜின் மகள் திவ்யா இந்த தகவலை தற்போது பொது வெளியில் அறிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 4 ஆண்டுகளாக என் அம்மா (மகேஸ்வரி) கோமாவில் இருந்து வருகிறார். அவரை எங்கள் வீட்டில் வைத்து நன்கு கவனித்து வருகிறோம். அவருக்கான உணவை டியூப் வழியாக செலுத்தி வருகிறோம். நாங்கள் மனதளவில் உடைந்துவிட்டோம். எனினும் அதிக நம்பிக்கையுடனும், நேர்மறையான எண்ணத்துடனும், மருத்துவ சிகிச்சையால் என் அம்மா குணமடைவார் என்று காத்திருக்கிறோம்.
என் அம்மா பழைய மாதிரி திரும்பவும் கிடைப்பார் என்பது எங்களுக்கு தெரியும். அம்மா கோமாவில் இருப்பதால், அப்பா தனியாளாக குடும்பத்தை சமாளித்து வருகிறார். அவர்தான் எனக்கு தாய்க்கு தாயாக இருக்கிறார். அதுபோல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவின் தாய் (நாதாம்பாள்), அதாவது எனது பாட்டியும் தவறிவிட்டார். இதனால், நானும் அப்பாவுக்கு தாய் போல் மாறிவிட்டேன். நானும், அப்பாவும் சக்திவாய்ந்த தாய்களாக மாறி, ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்திக் கொள்கிறோம். என்று எழுதியுள்ளார்.