இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சூர்யா நடித்து நாளை மறுநாள் வெளியாக உள்ள 'கங்குவா' படத்தின் வெளியீட்டிற்கு எதிராக மூன்றாவதாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் அவர்களுக்குத் தரவேண்டிய கடன் தொகையை 'கங்குவா' தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் வழங்கி அந்த வழக்கை முடித்து வைத்தது.
அடுத்து சென்னை உயர்நீதிமன்ற சொத்தாட்சியர் தொடர்ந்த ஒரு வழக்கில் நாளைக்குள் 20 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்றாவது வழக்காக பியூயல் டெக்னாலஜி என்ற நிறுவனம், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்த ஒரு வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 கோடியே 60 லட்ச ரூபாயை உயர்நீதிமன்றத்தில் டெபாசிட் செய்த பிறகே 'கங்குவா' படத்தை வெளியிட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
தங்களிடமிருந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வாங்கிய கடன் தொகையை, 18 சதவீத வட்டியுடன் சேர்த்து மொத்தம் 11 கோடி ரூபாய் கேட்டு பியூல் டெக்னாலஜி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அவர்களிடமிருந்து பெற்ற தொகையில் 5 கோடியை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வழங்கிவிட்டதாம். மீதி தர வேண்டிய அசல் தொகையான 1 கோடியே 60 லட்ச ரூபாயைத்தான் நாளைக்குள் டெபாசிட் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்தடுத்து வழக்குகளால் 'கங்குவா' படத்திற்கு சிக்கல் வருவதை அடுத்து, இன்னும் எத்தனை பேரிடம் கடன் வாங்கியுள்ளீர்கள் என அப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.