தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சமீபத்தில் ‛கங்குவா' படத்தின் எடிட்டரான நிஷாத் யூசுப் மரணித்த நிலையில் இப்போது மற்றொரு தமிழ் பட எடிட்டர் காலமானார். அவரது பெயர் உதய சங்கர். உடல் நலக்குறைவால் இவரது உயிர் பிரிந்தது. தமிழ் சினிமாவில் 46 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக ஆர்கே செல்வமணியின் ஆஸ்தான எடிட்டர்களில் இவரும் ஒருவர் என்றே சொல்லலாம்.
ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ‛செம்பருத்தி' படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து அவரின் ராஜ முத்திரை, மக்கள் ஆட்சி, அரசியல், குற்றப்பத்திரிக்கை போன்ற படங்களிலும் பணியாற்றினார். இதுதவிர பொண்டாட்டி ராஜ்ஜியம், ராஜாளி, புருஷன் பொண்டாட்டி என ஏராளமான படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி உள்ளார்.
இவரது சொந்த ஊர் சேலம். அவரது இறுதிச்சடங்கு நாளை அங்கு நடைபெற உள்ளது.