ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்துள்ள அமரன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கும் 23வது பட வேலைகளில் மீண்டும் பிஸியாகி விட்டார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்க, துப்பாக்கி படத்தில் நடித்த வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் ஒரு காட்சியை சென்னையை அடுத்துள்ள பெருங்களத்தூரில் நடத்தி இருக்கிறார் முருகதாஸ். அப்போது பெருங்களத்தூரில் உள்ள உயரமான பாலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. அது குறித்து வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.