துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நாளை மறுநாள் (22ம் தேதி) வெளிவர இருக்கும் படம் 'தூவல்'. இந்த படத்தை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர். ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜவேல் கிருஷ்ணா இயக்கி உள்ளார். சதீஷ் இசை அமைத்துள்ளார், தர்வேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா கூறும்போது “ஒக்கேனக்கல் பகுதியில் ஆற்றில் மீன் பிடித்து வாழும் ஆற்று மீனவர்கள் பற்றிய கதை. வயலுக்கு வரப்பு போன்று ஆற்றிலும் கற்களை கொண்டு தனி தனி குடும்பங்களுக்கு தனித்தனி பகுதி ஒதுக்கி மீன் பிடிக்கும் கதை. நேராக ஓடி வரும் ஆறு ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறு சிறு அருவிகாக மாறும். இந்த சிற்றருவிகளைத்தான் 'தூவல்' என்கிறார்கள். இந்த தொழிலும், தொழில் சார்ந்த பிரச்னைகளையும் பேசும் படம் இது. தமிழ் சினிமாவிற்கு இது புதிய கதை களமாகும்” என்றார்.