2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த 'அமரன்' திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. விஜய்யின் 'தி கோட்' படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அதில் விஜய் சிவகார்த்திகேயனிடம் 'துப்பாக்கிய பிடிங்க சிவா' என பேசிய வசனம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியருக்கு மைலேஜாக அமைந்தது.
இந்த நிலையில் அமரன் படத்தின் வெற்றிக்காக சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து அவர் கூறியதாவது, "ஷூட்டிங்கிற்கு முதல் நாள் தி கோட் படத்திற்கான சீன் பேப்பர் கொடுத்தனர். இதை பார்த்துகொங்க சுடக்கூடாது என்று தான் வெங்கட் பிரபு வசனம் எழுதியிருந்தார். ஆனால், விஜய் தான் அதை மாற்றி துப்பாக்கியை பிடிங்க சிவா என பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது அவர் எனக்கு தந்த அன்பாக மட்டுமே பார்க்கிறேன் ". என இவ்வாறு பகிர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன்.