ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், கடந்த வாரத்திலிருந்து ஜிவி பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், தயாரிப்பு நிறுவனம் அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் 'குட் பேட் அக்லி' பின்னணி இசைக்காகக் காத்திருக்க முடியவில்லை,” என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு ஜிவி பிரகாஷ் 'பயர்' எமோஜியைப் பதிலாகப் போட்டிருந்தார். அதற்கடுத்து கமெண்ட்டாக, “எனது வாழ்க்கையில் சிறந்த ஒன்றாக வந்து கொண்டிருக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'புஷ்பா 2' படத்தைத் தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் 'குட் பேட் அக்லி' படத்தையும் தயாரித்து வருகிறது. 'புஷ்பா 2' பின்னணி இசை குறித்து சர்ச்சை எழுந்து அது குறித்து தேவி ஸ்ரீ பிரசாத்தும் மேடையில் தயாரிப்பாளர் ரவியைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். ஹைதராபாத்தில் நடந்த 'ராபின்ஹுட்' படத்தின் பட பத்திரிகையாளர் சந்திப்பிலும் தயாரிப்பாளர் ரவி சங்கர், “தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் வரை அவர் எங்களது படத்திலும், நாங்கள் படம் தயாரிக்கும் வரை தேவி ஸ்ரீ எங்களுக்கு இசையமைப்பார்,” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் அவர்கள் தயாரிக்கும் 'குட் பேட் அக்லி' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்திற்குப் பதிலாக ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.