இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்குகிறார். இதனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களுக்கு முன் அறிவித்தனர். ஆனால் அதன் பிறகு இப்படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக சில நடிகர்களின் பெயர்கள் வெளியாகின. இறுதியாக சந்தீப் கிஷன் நடிப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க சந்தீப் கிஷன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று(நவ., 29) அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக மோசன் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
'நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்' என்ற மையக்கருவை சுற்றிதான் இந்த படம் நகரும். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். ஜனவரி 2025-ல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்கிறார் லைகா நிறுவனத்தின் ஜிகேஎம் தமிழ் குமரன்.