ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய ‛தளபதி' படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை. அதேபோன்றுதான் ‛நாயகன்' படத்திற்கு பிறகு கமலை வைத்து எந்த படமும் இயக்காமல் இருந்த மணிரத்னம் தற்போது அவர் நடிப்பில் ‛தக்லைப்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்படியான நிலையில் கமலை தொடர்ந்து அடுத்து ரஜினியை வைத்தும் மணிரத்னம் ஒரு படம் இயக்குவதாக ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது. அந்த நேரத்தில் அதுகுறித்து சுஹாசினி மணிரத்னத்திடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛ரஜினி -மணிரத்னம் இணைவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை,' என்று பதில் கொடுத்திருந்தார். ஆனபோதிலும் தற்போது மீண்டும் ரஜினியை வைத்து மணிரத்னம் ஒரு படம் இயக்கப் போவதாகவும் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளின் போது அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
மேலும் ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் -2 படத்தின் புரோமோ வீடியோ மற்றும் கூலி படத்தின் போஸ்டர் ஆகியவை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.