இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர்கள் பற்றி தெரியும், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சரோஜா, குட்டி பத்மினி, ஷாலினி இப்படி பலர். ஆனால் நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர் 'செங்கோட்டை கங்காதர கிட்டப்பா' என்கிற பி.ஜி.கிட்டப்பா.
அவரது குடும்பமே நாடக குடும்பம்தான். 1911ம் ஆண்டு கொட்டம்பட்டியில் 'நல்லதங்காள்' நாடகம் நடைபெற்றது. அதில் கிட்டப்பாவின் சகோதரரான செல்லப்பா பெண்வேடமிட்டு நல்லதங்காளாக நடித்தார். நல்லதங்காளின் குழந்தைகளில் ஒருவராக நடித்தார் கிட்டப்பா. அதுதான் நாடக உலகில் கிட்டப்பாவின் முதல் பிரவேசம். அடுத்த வருடம் மதுரை டவுன்ஹாலில் நடந்த ஒரு நாடகத்தில், 5 வயது சிறுவனான கிட்டப்பா பாடி நடித்தார். அதே டவுன் ஹாலில் நடந்த மற்றொரு நாடகத்தில் பாதுஷாவின் மகனாக நடித்தார்.
5 வயதில் மேடைப்பிரவேசம் செய்த கிட்டப்பா, தனது 6வது வயதில் சிங்கப்பூர் சென்று சில நாடகங்களில் நடித்தார். பின்பு இலங்கை சென்று நடித்தார். 12வது வயதில் கன்னையா நாடக கம்பெனியில் சேர்ந்தார். அதன் பிறகு சிறப்பு நாடகங்களில் நடித்த அவர் பின்னர் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கினார்.