ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர்கள் பற்றி தெரியும், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சரோஜா, குட்டி பத்மினி, ஷாலினி இப்படி பலர். ஆனால் நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர் 'செங்கோட்டை கங்காதர கிட்டப்பா' என்கிற பி.ஜி.கிட்டப்பா.
அவரது குடும்பமே நாடக குடும்பம்தான். 1911ம் ஆண்டு கொட்டம்பட்டியில் 'நல்லதங்காள்' நாடகம் நடைபெற்றது. அதில் கிட்டப்பாவின் சகோதரரான செல்லப்பா பெண்வேடமிட்டு நல்லதங்காளாக நடித்தார். நல்லதங்காளின் குழந்தைகளில் ஒருவராக நடித்தார் கிட்டப்பா. அதுதான் நாடக உலகில் கிட்டப்பாவின் முதல் பிரவேசம். அடுத்த வருடம் மதுரை டவுன்ஹாலில் நடந்த ஒரு நாடகத்தில், 5 வயது சிறுவனான கிட்டப்பா பாடி நடித்தார். அதே டவுன் ஹாலில் நடந்த மற்றொரு நாடகத்தில் பாதுஷாவின் மகனாக நடித்தார்.
5 வயதில் மேடைப்பிரவேசம் செய்த கிட்டப்பா, தனது 6வது வயதில் சிங்கப்பூர் சென்று சில நாடகங்களில் நடித்தார். பின்பு இலங்கை சென்று நடித்தார். 12வது வயதில் கன்னையா நாடக கம்பெனியில் சேர்ந்தார். அதன் பிறகு சிறப்பு நாடகங்களில் நடித்த அவர் பின்னர் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கினார்.