தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வெள்ளை ஆடை, கைகட்டி நிற்கும் பணிவு, அதிர்ந்து பேசாத குரல் இதுதான் ஏவிஎம்.சரவணன். 100 படங்களுக்கு மேல் தயாரித்தும் எந்த ஆர்ப்பாட்டமோ, அகங்காரமோ இல்லாத அமைதி கடல். ஏவி.மெய்யப்ப செய்டியார் மறைந்தபோது இத்தனை பெரிய நிறுவனத்தை யார் கட்டி காப்பது என்ற கேள்வி எழுந்தபோது கம்பீரமாக அந்த நாற்காலியில் உட்கார்ந்தவர்.
அன்றைக்கு ஏவிம்மை விட்டு விலகி இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆரை நிறுவனத்திற்குள் கொண்டு வந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, அர்ஜுன், கே.பாக்யராஜ் என அடுத்த தலைமுறை ஹீரோக்களையும் கொண்டு வந்தவர். ஓப்பனிங் சாங், ஹீரோ என்ட்ரி, இன்டர்வல் பிளாக், மூணு ரீலுக்கு ஒரு பாடல், ஒரு சண்டை, பரபரப்பான கிளைமாக்ஸ் என கமர்சியல் சினிமாவை வடிவமைத்தவர்.
ஏவிஎம் நிறுவனத்தை காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தவர். அன்றைய தேதியில் பெரிய பட்ஜெட் படமாக 'சிவாஜி'யை உருவாக்கினார். ரஜினி, ஷங்கர் என்ற இரு பெரும் ஜாம்பவான்களை இணைத்து சாதனை படைத்தார். தற்போது சினிமா தயாரிக்கவில்லை என்றாலும் ஏவிஎம் நிறுவனத்தின் சில பகுதிகளை அவரது சகோதரர்கள் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தினாலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை இப்போதும் சினிமாவிற்காக கொடுத்து வருகிறவர். ஓடிடி வெப் தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆல்பங்கள் என காலத்துக்கேற்ற மாற்றத்தை கொண்டு வந்தவர்.
இன்று அவருக்கு 84வது பிறந்த நாள். சற்று உடல்நலக்குறைவுடன் இருக்கும் அவர் மீண்டும் ஏவிஎம் வளாகத்திற்குள் ராஜநடை போட வாழ்த்துவோம்.