ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை பிரபலமான மைனா நந்தினி சினிமா, வெப்சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார். அத்துடன் தன் கணவர் யோகேஷுடன் சேர்ந்து சொந்தமாக யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். அண்மையில் சொந்தமாகவே 'புள்ளத்தாச்சி' என்கிற வெப்சீரிஸை தயாரித்து தனது யூ-டியூபில் வெளியிட்டு வந்தார். இதுவரை 2 எபிசோடுகள் வரை ரிலீஸாகியுள்ள அந்த வெப்சீரிஸுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், புள்ளத்தாச்சி வெப்சீரிஸை கைவிடுவதாக நந்தினி - யோகேஷ் தம்பதியினர் அறிவித்துள்ளனர். அதற்கு காரணம் புள்ளத்தாச்சி வெப்சீரிஸுக்காக ஸ்ரீலங்கா சென்று அங்கு ஷூட்டிங் செய்துள்ளனர். ஆனால், ஷூட் செய்யப்பட்ட வீடியோக்கள் இருந்த ஹார்ட்டிஸ்க் கீழே விழுந்து டேமேஜ் ஆனதில் மொத்த வீடியோக்களும் டெலிட் ஆகிவிட்டதாம். இந்த வீடியோக்களை ரெக்கவர் செய்ய பல லட்சங்கள் செலவாகும் என்றும், ஆனால், சேமிப்பு பணம் முழுவதையும் ஸ்ரீலங்கா ஷூட்டிங்கிற்கே செலவு செய்துவிட்டதால் இனி புள்ளத்தாச்சி வெப்சீரிஸை தயாரிக்க முடியாமல் கைவிடுவதாகவும் இருவரும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.