ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த 'புஷ்பா 2' படம் இன்று(டிச., 5) பான் இந்தியா படமாக வெளியானது.
இப்படத்தின் பிரிமியர் காட்சி நேற்று ஹைதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடந்தது. அந்தக் காட்சியில் நடிகர் அல்லு அர்ஜுனும் படம் பார்த்தார். தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக போலீசார் தடியடி நடத்தினர். அதனால் கலைந்த ஓடிய கும்பலில் ஒருவர் மீது மற்றவர் விழுந்து தவித்தனர். அதில் 39 வயது பெண் ஒருவர் இறந்து போனார். கணவர், தனது இரண்டு குழந்தைகளுடன் அந்தப் பெண் படம் பார்க்க வந்திருந்தார்.
இதனிடையே, அந்தப் பெண் குடும்பத்திற்கு உதவி செய்வோம் என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில், “நேற்று இரவு திரையிடலின் போது நடந்த சோகமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அந்தக் குடும்பம் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சிறு குழந்தையுடன் உள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவை வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்கள்.