படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சென்னை: நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த, எழுத்தாளரும், தேசிய விருது பெற்ற இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி இன்று (டிச.,06) காலமானார். அவருக்கு வயது 77.
எழுத்தாளரும், இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலனின்றி, இன்று(டிச., 6) காலை காலமானார்.
கடந்த 1979ல் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான 'குடிசை' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஜெயபாரதி. பத்திரிகையாளராக இருந்து சினிமா துறைக்கு வந்தவர். வணிக சினிமா எடுக்க விரும்பாமல், யதார்த்தமான கதைகளைக் கொண்ட மாற்று சினிமா மட்டுமே எடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டவர்.
இவரது இயக்கத்தில் 'குடிசை', 'ஊமை ஜனங்கள்', 'ரெண்டும் ரெண்டும் அஞ்சு', உச்சி வெயில்', 'நண்பா நண்பா', 'குருஷேத்திரம்', 'புத்திரன்' ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இவர் இயக்கிய குடிசை படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, பல்வேறு விருதுகளையும் பெற்றது.
கடைசியாக 2010ம் ஆண்டு 'புத்திரன்' என்ற படத்தை இயக்கினார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.